• September 29, 2023

மணிப்பூரில் மீண்டும் அதிர்ச்சி… மத்திய அமைச்சரின் வீட்டை தாக்கிய போராட்டக்காரர்கள்… பாதுகாப்பு அதிகரிப்பு.!!

மணிப்பூர் மாநிலத்தில் மத்திய அமைச்சர் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்பாக அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் கடந்த சில மாதங்களாகவே பழங்குடியினார் மக்களுக்கு  இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த மாநில பற்றி எரிகிறது என்றே கூறலாம். தினமும் ஒரு கலவரம், படுகொலை சம்பவங்கள் என்று நாட்டை உலுக்கி வருகின்றது.

இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பான பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி, மணிப்பூரை சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சரான ரஞ்சன் சிங் மீதும் அவரது வீட்டின் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்னால் மத்திய அமைச்சரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

முட்டை கேக் செய்வது எப்படி..? வாங்க பார்க்கலாம்..!!

Read Next

வெஜிடபிள் கேக் செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular