
மணிப்பூர் என்றாலே வன்முறை என்ற சொல் நாமக்கல் ஞாபகம் வரும் அளவிற்கு தற்பொழுது அம்மாநிலத்தில் வன்முறை தலைவிரித்தாடி கொண்டு உள்ளது.
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் உலாவி வரும் வீடியோ இரண்டு பெண்கள் நிர்வாணமாகி கொடுமைப்படுத்திய காட்சி தான். இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்கு முன்பே அடுத்த பல அசம்பாவிதங்களும் மணிப்பூரில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
அதன் வரிசையில் மணிப்பூரில் உள்ள ஒரு மளிகை கடையில் ஒரு பெண்ணிற்கு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த எல்லை பாதுகாப்பு படை வீரரை இடைக்கால பணி நீக்கம் செய்து உள்ளதாக நேற்று ஒரு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி அன்று நடந்ததாக துணை ராணுவப்படை நிர்வாகிக்கு புகார் வந்ததை தொடர்ந்து அன்றே அந்த படைவீரரை இடைக்கால படிநீக்கம் செய்துள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்து உள்ளார்.