இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பொதுவாக இருக்கும் பழக்கங்களில் ஒன்றுதான் அதிக நேரத்தில் சாப்பிட்டுவிட்டு தூங்குவது. மதிய நேரத்தில் தூங்குவது சரியா இந்த பழக்கம் முதலில் நல்ல பழக்கமா என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மதிய வேளையில் தூங்குவது தவறு இல்லை இருப்பினும் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒருபோதும் மதிய நேரத்தில் தூங்கக்கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மதிய நேரத்தில் தூங்குவதையே ஒரு சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள் அது முற்றிலும் தவறான செயல். மதிய நேரத்தில் தூங்கும் போது அது 40 நிமிடங்களை தாண்டும் போது சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய் நம் உடலில் ஏற்பட்டால் பல பிரச்சினைகள் நம் உடலில் ஏற்படலாம். அதில் ஒரு சிலவற்றை தற்போது பார்க்கலாம்.
சர்க்கரை நோய் ஏற்பட்டால் கண் பார்வை குறைபாடு ஏற்படலாம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் இந்த சர்க்கரை வியாதியினால் நம் உடலில் உருவாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மதிய நேரத்தில் தூங்குபவர்களுக்கு கண்டிப்பாக இவை எல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.




