மதுபோதைக்காக 80 வயது மூதாட்டி காதை அறுத்து கொலை..!! போலீஸ் விசாரணை..!!
மதுரை: மது அருந்த பணம் இல்லாததால் 80 வயது மூதாட்டியை கொன்று காதுகளை அறுத்து தோடு திருடப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவேடகம் கிராமத்தை சேர்ந்த சோனை என்ற நபர் மது வாங்கப் பணம் இல்லாததால், அந்த பகுதியில் வசித்து வந்த பாப்பாத்தி (80) என்ற மூதாட்டியை கொன்றுள்ளார். மேலும், அவர் காதை அறுத்து தோடுகளை திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து, சோனை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.




