
மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், என வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படியை (DA) உயர்த்துகிறது. மேலும், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்த DA வானது 53% ஆக வழங்கப்பட்டது. அந்த வகையில், “நடப்பாண்டிற்கான ஊதிய உயர்வை பிப்ரவரி மாத இறுதிக்குள் 3% அதிகரிக்க உள்ளதாக” தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதனால், 2025 ஆம் ஆண்டில் “மத்திய அரசின் ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 56% ஆக உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஓய்வூதியதரர்களுக்கான நிவாரணமும் அதிகரிக்கபடலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிவாரண உயர்வு குறித்து வருகின்ற “பிப்ரவரி 26” ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.