
முடிவெடுத்தல் : ஒருவர் மனதளவில் முதிர்ச்சி பெற்று இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் முடிவு எடுக்கும் திறனை வைத்து கண்டுபிடித்து விடலாம். இவர்கள் மனதளவில் உறுதியோடு இருப்பதோடு தங்களுக்கு என்று சில நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு வாழ்வார் அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் நெருங்கியவர் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டுபவர்…
பிறரை மெத்தனமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் : ஒரு சிலர் தங்களிடம் ஒருவர் அன்பாக பாசமாக பழகுகிறார் என்றால் அவரை பிற விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வர் ஆனால் மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் தங்களுடன் இருப்பவர்களை எந்த விஷயத்திற்காகவும் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் கூட அது சரியான வழியில் பயன்படுத்துவார்கள் தவிர அதை வீண் செய்ய மாட்டார்கள்..
கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் : மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்கள் யாரிடமாவது ஒரு வாக்கு கொடுத்தார்கள் என்றால் அதை ஒருபோதும் தவற விட மாட்டார்கள். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் கூட அதை முடித்து கொடுக்க நினைப்ப நேரத்திற்கு வேலைக்கு வருவதில்லை இருந்து ஒருவரை சந்திக்கிறேன் என்று கூறினால் அவரை சந்திப்பது வரை அவர்கள் என்ன கூறினாலும் தங்கள் வாக்குமூலத்திலும் வார்த்தைக்கும் உண்மையாக இருப்பார்.
தனக்காகவும் பிறருக்காகவும் பேசுபவர் : ஒரு சிலர் தன் வேலை நடந்தால் போதும் என்று தனக்கு நல்லது நடந்தால் போதும் என்று இருப்பார். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தான் துன்பப்பட்டாலும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது என்று பார்ப்பார்கள் யாருக்காவது அநீதி நேர்ந்தால் அதை தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்..
உணர்ச்சி அறிவுடன் இருப்பர் : மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவருக்கு அறிவும் மிகுதியாக இருக்கும் கோபம் காதல் காமம் என எந்த உறவு வந்தாலும் அதை எப்படி கையாள வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் இதனால் அவர்கள் எந்த கடினமான சூழலிலும் பாசிட்டிவாக இருக்க முடிகிறது தன்னை சுற்றியுள்ளவர்கள் பரபரப்பாக இருந்தால் கூட இவர்கள் ரிலாக்ஸாக இருப்பார்கள்..
பிறரை பிடித்துக் கொள்ளல் : இந்த காலகட்டத்தில் பலருக்கு புரிந்துணர்வு இல்லாமலேயே போய்விட்டது ஆனால் மனம் முதிர்ச்சி பெற்றவர்களாக தன்னை புரிந்து கொள்வதோடு தன்னை சுற்றி இருப்பவர்களையும் நன்றாக புரிந்து கொண்டு பிறர் தன் முன் ஜொலிக்கும் ஜெயிக்கும் போது அவர்களை முழு மனதோடு பாராட்டுவார்கள்..
தன்னை அறிதல் : தன்னை அறிதல் என்பது பலரிடமும் இல்லாத ஒரு திறன் ஆகும் மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்கள் தன் மனதை நன்கு அறிந்தவர்களாக இருப்பார் தன்னுடைய பலம் பலவீனம் இரண்டையும் நன்கு அறிந்த எதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவர்கள்…!!