
மனைவியின் அருமை..!
கணவனை இழந்த மனைவியை விடவும்
மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்.
காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.
ஆனால்
மனைவியை இழந்த கணவன்…
தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை
தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை
நோய்படும் போது தானும் நோகும் தாயை
இழக்கிறான்.
ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?
கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.
ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் மற்றும் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.
தான் கண்ட கனவுகள் அனைத்தையும்
கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.
வீட்டின் வேலைக்காரியாக ,
சலவைக்காரியாக,
சமையல்செய்பவளாக,
கணக்குப்பிள்ளையாக
பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்…
அவள் இருக்கும் வரை
இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.
பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும்.
பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் .
கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாடலில் அருமையாக எழுதியிருப்பார்…