மனைவியுடன் சென்றபோது டூவீலர் கீழே விழுந்து விபத்து..!!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, திருக்கூர்ணம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் கோபி வயது 35.

இவரது மனைவி துர்காதேவி வயது 30.

இவர்கள் இருவரும் ஜூலை 24ஆம் தேதி இரவு 10 மணியளவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம் அப்பகுதியில் ராமசாமி என்பவர் தோட்டம் அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கோபிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக
துர்காதேவி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோபி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Read Previous

இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம்..!!

Read Next

முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular