மனைவியுடன் விவாகரத்து..!! பேக்கரி உரிமையாளர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!
டெல்லி: பேக்கரி உரிமையாளர் புனித் குரானா என்பவர் நேற்று முன்தினம் (டிச. 31) தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், புனித்துக்கும் மனிகா என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தொழிலில் பங்கு தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது. போலீஸ் தொடர்ந்து விசாரிக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.