
கோவை சிங்காநல்லூர் அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி 24 வயதான கஸ்தூரி, கிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார், கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கமும், கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது, இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது, இதை தொடர்ந்து கிருஷ்ணன் தனது மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார், இதை தொடர்ந்து கஸ்தூரி அவரது கணவர் கிருஷ்ணனின் சகோதரி சுமதி வீட்டிற்கு சென்று தனது கணவர் எங்கே என விசாரித்துள்ளார் அப்போது அங்கு இருந்த சுமதியின் கணவர் ராம்குமார் கஸ்தூரியிடம் தகராறு செய்துள்ளார், பின்னர் கஸ்தூரி தனது வீட்டிற்கு வந்து விட்டார் தொடர்ந்து நேற்று மாலை கஸ்தூரி வீட்டில் இருந்த போது அவரது கணவர் கிருஷ்ணன் ராம்குமார் மற்றும் அவரது உறவினர் முனியப்பன் ஆகியோர் அங்கு வந்து கஸ்தூரியிடம் தகராறு செய்தனர், தொடர்ந்து கஸ்தூரியை அவரை சரமாரியாக தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர், கஸ்தூரி வாயில் கத்தி குத்து பட்டது இதில் காயமடைந்த கஸ்தூரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் கஸ்தூரியின் கணவர் கிருஷ்ணன், மற்றும் அவரது உறவினர்களான ராம்குமார், முனியப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.