
- மரவள்ளி கிழங்கு உருண்டை செய்முறை
தேவையான பொருட்கள் :
* மரவள்ளி கிழங்கு அரை கிலோ
* சர்க்கரை (அல்லது) வெல்லம் 100 கிராம்
* ஏலக்காய் 3 பொடியாக்கியது
* தேங்காய் துருவல் கால் கப்
செய்முறை :
மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ள வேண்டும்.
துருவிய கிழங்கை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
வேக வைத்த கிழங்குடன் தேங்காய் துருவல், சர்க்கரை (அ) துருவிய வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவையை உருண்டையாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து கிழங்கு உருண்டை ஆக்க வேண்டும்.இப்படியே கிழங்கு புட்டாகவும் பரிமாறலாம்.
இந்த கலவையை உருண்டையாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து கிழங்கு உருண்டையாகவும் பரிமாறலாம். இப்போது சுவையான மரவள்ளிக் கிழங்கு ரெடியாகி விட்டது.