தமிழ் சினி தயாரிப்பின் முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு இவரின் இறப்பு தமிழ் சினித்துறையில் பெரும் வருத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது…
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளம் வருவது ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி, இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு, 2015 ஆம் ஆண்டு உருமீன் படத்தை தயாரித்ததன் மூலம் அறிமுகமானார், தொடர்ந்து இவர் தயாரித்த படங்களில் மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள், கள்வன் உள்ளிட்ட பல படங்களை சிறப்பாக தயாரித்தும் தமிழ் திரை உலகுக்கு தந்துள்ளார், மேலும் அவரது நிரப்பு தமிழ் சினி துறை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது, டில்லி பாபு 50 வயதை கொண்டவர் தற்போது அவரின் மரணம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இன்று நான்கு மணிக்கு மேல் அவரின் இறுதி பயணம் அவரது வீட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, அவரின் இறப்புக்கு தமிழகமும் தமிழக ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்..!!




