மழையை எவ்வாறு அளக்கிறார்கள்..?? என்று தெரியுமா..??

மழையை எவ்வாறு அளக்கிறார்கள்?

செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை ,
அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம். அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து காணலாம்.

வானிலை ஆராய்ச்சி மையங்களில்
“Rain gauge” என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, ‘இத்தனை மி.மீ. மழை பெய்தது’ என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.

ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம்.

எனவே, 10 மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும். தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும்.

Read Previous

அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் பிள்ளைகளை ஏமாற்றியதில்லை..!!மாறாக ஒரு சில பிள்ளைகளால் ஏமாந்த பெற்றோர்களே அதிகம்..!!

Read Next

மனதை கசிய வைக்கும் சிறுகதை ..!! கண்டிப்பாக வாசிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular