மாரடைப்பு யாருக்கு அதிகமாக வருகிறது?.. ஆண்களுக்கா?.. பெண்களுக்கா?..

இன்று மாரடைப்பு பிரச்சனை (Heart Attack) பெருமளவு பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்றாலும் அதிக பாதிப்பு ஆண்களுக்கா பெண்களுக்கா என்பதை பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் இதயம் ஆணின் இதயம் போன்று இருக்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. உதாரணத்துக்கு ஒரு பெண்ணின் இதயம் பொதுவாக அதன் உட்புற அறைகளில் சிறியதாக இருக்கும். இந்த அறைகளில் சிலவற்றை பிரிக்கும் சுவர்கள் மெல்லியதாக இருக்கும். மேலும் பெண்ணின் இதயமானது ஆணின் இதயத்தை விட வேகமாக பம்ப் செய்யும் போது ஒவ்வொரு முறை அழுத்தும் போதும் 10% குறைவான இரத்தத்தை வெளியேற்றுகிறது.

கவனிக்க வேண்டிய வேறுபாடுகள் என்ன?..

கரோனரி ஆர்டரி நோயின் (சிஏடி) அறிகுறிகள் சிகிச்சைகள் மற்றும் விளைவுகளில் பாலினம் ஒரு பங்கு வகிக்கிறது என்பதால் அவை முக்கியமானவை.

ஆண்களுக்கு இல்லாத ஆபத்து காரணிகள் பெண்களுக்கு உண்டு.

கர்ப்ப காலத்தில் உருவாகும் எண்டோமெட்ரியோசிஸ் பாலிசிஸ்டிக் கருப்பை நோய் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் சில நோய்கள் மாரடைப்புக்கான முக்கிய காரணமான கரோனரி தமனி நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

எண்டோமெட்ரியோசிஸ் 40 வயதுக்குட்பட்ட பெண்களில் coronary artery disease உருவாக்கும் அபாயத்தை 400% உயர்த்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் ஆண்களுடன் பாரம்பரிய ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த சர்க்கரை அளவுகள், அதிக கொழுப்பு அளவுகள், புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமன் என்று சொல்லலாம்.

ஆண்களை போலவே பெண்களும் இதய நோயின் குடும்ப வரலாற்றால் பாதிக்கப்படலாம். குறிப்பாக 55 வயதுக்கு முன் தந்தை அல்லது சகோதரருக்கு coronary artery disease இருப்பது கண்டறியப்பட்டால் தாய் அல்லது சகோதரிக்கு 65 வயதுக்கு முன்பே கண்டறியப்பட்டால் நீங்கள் இந்த அபாயத்தை கொண்டிருக்கலாம்.

பெண்களில் மாரடைப்பு அறிகுறிகள்:

மாரடைப்பின் போது ஏற்படும் வலியை ஆண்கள் பெரும்பாலும் ஒரு நசுக்கும் எடை என்கிறார்கள். சில பெண்கள் மார்பு வலியை அனுபவிக்கிறார்கள். ஆனால் மாரடைப்புக்கு முன் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு வித்தியாசமான நுட்பமான அறிகுறிகளை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாரடைப்பு (heart attack) அறிகுறிகளை ஆண்களை விட பெண்களே அதிகம் எதிர்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு வயதான காலத்தில் மாதவிடாய்:

பெண்களுக்கு முதல் மாரடைப்பு என்பது அவர்களுக்கு வயதான காலத்தில் தொடங்குகிறது. மாதவிடாய் நின்ற பிறகும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் வரை பெண்களுக்கு இதய நோயிலிருந்து சில பாதுகாப்பை வழங்குகிறது. அதனால் தான் பெண்களுக்கு மாரடைப்புக்கான சராசரி வயது 70 ஆகவும் ஆண்களில் 66 ஆகவும் உள்ளது.

உடல் சோர்வு:

புதிய அல்லது வியத்தகு சோர்வு. உதாரணமாக படுக்கையில் படுக்க தூண்டும் அளவுக்கு எளிய செயல்பாடு கூட உங்களை சோர்வடைய செய்யலாம். நீங்கள் வேலையே செய்யாத நிலையிலும் சோர்வாக உணர்வீர்கள். அல்லது மார்பு கனமாக இருக்கலாம். சோர்வாக இருந்தாலும் தூங்க முடியாது. அல்லது உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு பிறகு நீங்கள் திடீரென்று சோர்வடையலாம்.

மூச்சுத்திணறல் அல்லது வியர்வை:

எந்த அறிகுறியும் உழைப்பும் இல்லாத நிலையில் மூச்சுத்திணறல் அல்லது வியர்வை ஏற்படும். மற்றும் மார்பு வலி அல்லது சோர்வு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் போது இதை கவனிக்கவும். உடல் உழைப்புக்கு பிறகு காலப்போக்கில் அறிகுறி மோசமடைகிறதா என்பதை கவனியுங்கள். படுத்திருக்கும் போது அறிகுறிகள் மூச்சுத்திணறல் அதிகமாகலாம். உட்காரும் போது நிவாரணம் பெறலாம். மேலும் குளிர் போன்ற உணர்வு உண்டாகலாம்.

கழுத்து, முதுகு அல்லது தாடையில் வலி:

குறிப்பிட்ட தசை அல்லது மூட்டு வலி இல்லாத போது நீங்கள் இலேசாக வேலை செய்தாலும் அசெளகரியத்தை உணர்வீர்கள். இது கவனிக்கப்பட வேண்டிய அறிகுறி. ஆண்கள் பொதுவாக இடது கையில் வலியை அனுபவிக்கும் போது பெண்கள் இந்த வலியை இரண்டு கைகளிலும் அனுபவிக்கலாம். மார்பில் தொடங்கும் வலி முதுகில் பரவலாம். திடீரென ஏற்படும் வலி மற்றும் இரவில் உண்டாகலாம். வலி தாடையின் கீழ் இடது பக்கத்தில் ஆகிய இடங்களில் உண்டாகலாம்.

சுருக்கமாக:

கழுத்து, தாடை, தோள்பட்டை, மேல் முதுகு அல்லது மேல் வயிறு, அசெளகரியம், மூச்சுத்திணறல் ஒன்று அல்லது இரண்டு கைகளிலும் வலி, குமட்டல் அல்லது வாந்தி, வியர்வை, தலைச்சுற்ற அசாதாரண சோர்வு, நெஞ்செரிச்சல், என இவை தெளிவற்றதாக இருக்கலாம்.

பெண்களில் சிஏடி பிரச்சனை கண்டறிவது கடினம்:

ஆண்களை விட பெண்கள் சிஏடி பிரச்சனை எதிர்கொண்டால் அதை கண்டறிவது கடினமாக இருக்கும். இதய வடிகுழாயின் போது எடுக்கப்பட்ட எஸ்ரே படமானது இதயத்தின் பெரிய தமனிகளில் குறுகலான அல்லது அடைப்புகளை கண்டறிவதற்கான தரமான சோதனை ஆகும்

ஆனால் பெண்களில் சிஏடி அடிக்கடி சிறிய தமனிகளை பாதிக்கிறது. இது ஆஞ்சியோகிராமில் தெளிவாக காண முடியாது. அதனால் தான் ஆஞ்சியொகிராம் செய்த பிறகு அனைத்தும் தெளிவான சிக்னல் கொடுக்கப்பட்ட பிறகும் பெண்கள் தொடர்ந்து அறிகுறிகளை கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்களில் நிபுணத்துவம் வாய்ந்த இதயநோய் நிபுணரை பார்ப்பது நல்லது.

மாரடைப்பு என்பது ஆண்களை விட பெண்களுக்கு கடினமானது:

மாரடைப்புக்கு பிறகு ஆண்களை போல் பெண்கள் சிறப்பாக செயல்பட மாட்டார்கள். அடிக்கடி மருத்துவரை சந்திக்க வேண்டி இருக்கும். நீண்ட காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் தீவிர நிலையில் இழப்பை கூட சந்திக்கலாம்.

அதிலும் மாரடைப்பால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற சிகிச்சை அளிக்கப்படாத ஆபத்து காரணிகள் அதிகம் இருப்பதால் இது உண்டாகலாம். சில நேரங்களில் பெண்கள் தங்களை காட்டிலும் குடும்பத்தின் மீது அதிகம் அக்கறை செலுத்துவதாலும் கூட பாதிப்பு தீவிரமாகும் வரை அவர்கள் அலட்சியம் செய்யலாம்.

மாரடைப்புக்கு பிறகு பெண்கள் எப்போதும் சரியான மருந்துகளை எடுப்பதில்லை இதனால் மற்றொரு மாரடைப்பு ஏற்படக்கூடிய இரத்த உறைவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு 12 மாதங்களுக்குள் இரண்டாவது மாரடைப்பு (heart attack) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை விளக்குகிறது.

பெண்களுக்கு இதய நோய் ஆபத்து உண்டாக்கும் காரணங்கள்:

  • கரோனரி தமனி நோய்க்கான பல பாரம்பரிய ஆபத்து காரணிகள்
  • அதிக கொழுப்பு
  • உயர் இரத்த அழுத்தம்
  • உடல் பருமன் போன்றவை பெண்கள் போன்று ஆண்களையும் பாதிக்கின்றன. ஆனால் மற்ற காரணிகள் பெண்களில் இதய நோய் வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்கலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நீரிழிவு நோய் பெண்கள் வலியை உணரும் விதத்தை மாற்றும் என்பதால் இவர்களுக்கு அமைதியான மாரடைப்பு உண்டாகலாம். அறிகுறிகள் இல்லாமல் மாரடைப்பு (heart attack) ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மன அழுத்த மற்றும் மனச்சோர்வு

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆண்களை விட பெண்களின் இதயத்தை அதிகம் பாதிக்கிறது. மனச்சோர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதை சிரமமாக்கலாம். மற்றும் பிற சுகாதார நிலைமைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை பின்பற்றலாம்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய்க்கு அதிக ஆபத்து காரணி ஆகும். சமீபமாக பெண்களும் இந்த பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் செயல்பாடு

உடல் செயல்பாடு (physical activity) இல்லாதது இதய நோய் வருவதற்கு முக்கிய ஆபத்து காரணம் ஆகும்.

மெனோபாஸ்

மாதவிடாய் நின்ற பிறகு குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் சிறிய இரத்த நாளங்களில் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

கர்ப்ப கால சிக்கல்கள்

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் தாயின் நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு நோயை அதிகரிக்கும். இந்த நிலைமைகள் பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

இதய நோய் வரலாறு

ஆரம்ப கால இதய நோயின் குடும்ப வரலாறு கொண்ட ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஆபத்து காரணியாக தோன்றுகிறது.

அழற்சி நோய்கள்

முடக்கு வாதம், லூபஸ் மற்றும் பிற அழற்சி நிலைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். அனைத்து வயது பெண்களும் இதய நோயை தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக 65 வயதுக்குட்பட்ட பெண்கள். குடும்ப வரலாற்றி இதய நோய் உள்ளவர்கள் இதய நோய் ஆபத்து காரணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்களை போன்று பெண்களும் மாரடைப்பு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். ஆனால் ஆண்களை காட்டிலும் அதிக அறிகுறியை பெறுவதும் உடல் குறைபாடுகளில் அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு எதிர்கொள்வதும் பெண்கள் என்பதால் கூடுதல் கவனம் அவசியம்.

Read Previous

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு..!!

Read Next

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?.. இதற்கான தீர்வுதான் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular