நாம் அனைவரும் பூக்கள் மற்றும் இலைகளை பறிப்பதுண்டு. ஆனால் அந்த பூக்களையும் இலைகளையும் மாலை நேரத்தில் பறிக்கக் கடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
பூக்கள் மற்றும் இலைகள் மாலை நேரத்தில் ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில் அதை பறித்தால் அதனை தொந்தரவு செய்வது போல் நேரிடும். அது பாவமாக கருதப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில்தான் பூச்சிகளும் பறவைகளும் தங்களது கூட்டிற்கு வரும். அப்போது பூக்களைவும் இலைகளையும் பறித்தால் அதையும் தொந்தரவு செய்வது போல் நேரிடும்.
இது மட்டுமில்லாமல் மாலை நேரத்தில் தெய்வங்கள் பூக்கள் இடயே இருக்கும் என நம்பப்படுகிறது. எனவே மாலை நேரத்தில் பூக்களை பறிக்கக் கூடாது. மேலும் சூரியன் அஸ்தமனமான பின்பு பூக்களை பறித்தால் லட்சுமிதேவிக்கு கோபம் வரும். இதனால் பூஜை செய்ய காலை நேரத்தில் பூக்களை பறிப்பது மிகவும் நல்லது.
அறிவியலும் இதை தான் கூறுகிறது. அதாவது காலை நேரத்தில் இலை தலைகள் ஆக்ஸிஜனை வெளியிட்டு கார்பன் டை ஆக்சைடு உள்ளிருக்கும். ஆனால் சூரியன் அஸ்தமனமான பின்பு ஆக்சிஜனை உள்ளெழுத்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும். இதனால் சுவாச பிரச்சனை வரும். எனவே மாலை நேரங்களில் பூக்கள் மற்றும் இலைகளை பறிப்பதை தவிர்க்கவும்.




