• September 24, 2023

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! பெண் உள்பட 5 பேர் படுகாயம்..!!

கடலூரில் சோகம் – மின்னல் தாக்கி ஒருவர் பலி. பெண் உள்பட ஐந்து பேர் படுகாயம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள, சின்னகாரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவர் வயலில் மேய்ந்து கொண்டு இருந்த தனது மாட்டை பிடிக்க சென்றப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோல், கடலூர் மாவட்டம், ராமநாதன்குப்பம் பெருமாள் ஏரிக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழே மழைக்காக 5 பேர் ஒதுங்கி நின்றபோது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில், ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி ஒருவரும், ஐந்து பேர் படுகாயம் அடைந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மாம்பழ மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!!

Read Next

என்னது பாஜகவுடன் கூட்டணி இல்லையா.? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தால் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular