மிருதுவான நீர் தோசை செய்வது எப்படி?..

நீர் தோசையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மற்ற தோசையை விட இது மெதுவாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
உப்பு
எண்ணெய்
தண்ணீர்

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பத நிலை அடையும் வரை நீர்க்க செய்யவும்.

அடுத்து ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு கரைத்த மாவை ஊற்றி சுடவும். ஒரு நிமிடம் வெந்த பிறகு மீண்டும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான மற்றும் மிருதுவான நீர் தோசை தயார்!

Read Previous

Degree, Diploma முடித்தவர்களுக்கு..!! மாதம் ரூ.56,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! இன்றே கடைசி நாள்..!!

Read Next

காரில் பயணித்த பெண் பாஜக பிரமுகருக்கு நேர்ந்த பயங்கரம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular