
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி கருமையான சிறு சிறு புள்ளிகளும் தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கரும்புள்ளிகள் அதிகமாக வெயிலில் சுற்றுவது கெமிக்கல் சம்பந்தமானவற்றை முகத்தில் யூஸ் பண்ணுவது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு வைட்டமின் குறைபாடு மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை வீட்டிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் .இப்படி தினமும் செய்து வர முகத்தில் உள்ள கருமை படிப்படியாக குறைந்து முற்றிலும் அகலும். முட்டையின் வெள்ளை கருவுடன் தயிரை சேர்த்து நன்கு கலந்து அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும் இப்படி இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர முகத்தில் இருக்கும் கருமை நீங்கும் .வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் வாரம் மூன்று முதல் நான்கு முறையோ செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவோடு காணப்படும். எலுமிச்சை சாற்றினை அரை டீஸ்பூன் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும் .