காற்று மாசு காலநிலை மாற்றம் என பல காரணங்களால் நமது முகம் பொலிவிழந்து காணப்படுகின்றன இதில் இருந்து விடுபட உங்கள் முகத்தை பொலிவாக மாற்றும் சில பழக்கங்கள் இங்கு காணலாம்..
முகத்தை பொலிவாக நாம் இரவு நேரங்களில் பல ஸ்கின் கேர் செயல் முறையை பயன்படுத்துகிறோம் ஆனால் முகத்திற்கு காலை எழுந்ததும் சில சிகிச்சைகளை அளிக்க வேண்டும் அப்போதுதான் முகம் குறைகள் இல்லாமல் பொலிவாக மாறும், தினமும் காலை எழுந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து தேய்க்கவோ அல்லது ஐஸ் கட்டிகள் கலந்து தண்ணீர் முகம் கழுவ வேண்டும் இது முகத்தின் நரம்புகளை அமைதியாக்கி முகத்தின் பொலிவை கூட்டுகின்றன, இரவு முழுவதும் முகத்தில் இறந்த செல்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கலாம் எனவே காலை எழுந்ததும் முகத்தை எண்ணை கலந்த ர்களை உபயோகப்படுத்தி முகத்தை கழுவ வேண்டும் இதன் மூலம் முகத்தில் உள்ள சிறு சிறு குமிழ்கள் தங்கி உள்ள மாசினை எளிமையாக அகற்ற முடியும், காலை எழுந்ததும் காபி டீ போன்ற காபி அதிகமாக இருக்கும் பானங்களை குடிப்பதை காட்டிலும் விட்டமின் உள்ள பிரஸ் ஜூஸ்களை குடிக்கலாம் இது முகத்திற்கு தேவையான நீரேற்றத்தை கொடுக்கும், காலையில் குளிப்பதற்கு சூடான தண்ணீரை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஏனெனில் சூடான தண்ணீர் சருமம் மற்றும் நரம்பியல் செயல்பாட்டினை நேரடியாக பாதிக்கும் அதிகமாக தொடர்ந்து சுடுதண்ணீரில் குளிப்பவர்களின் தோள்கள் வேகமாக சுருக்கத்தை அடையும் என கூறப்படுகின்றது, காலையில் குளித்து முடித்ததும் ஏதேனும் மாய்ஸ்ரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் முகத்தின் பொலிவு பராமரிக்கப்படும் இதனை தொடர்ந்து கடைபிடித்தால் முகத்தின் பொலிவு குறைவு போவதில்லை…!!!




