
பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஒரு கட்சியின் மற்றொரு கட்சியை இழிவு படுத்தி பேசுவதும், அவதூறாக நடத்துவதும் வழக்கமாகி கொண்டு தான் வருகின்றது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவரது அவதூறாக புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி காவல் துறையினரிடம் இது குறித்து திமுக நிர்வாகிகள் புகார் அளித்து உள்ளனர். அதன் பின் பாஜக நிர்வாகி ஜெயக் குமார் மீது வழக்கு பதிவு செய்து உள்ள காவல் துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்து உள்ளனர்.