தேவையான பொருள்: தென்னை மரக்குடி எண்ணெய் 30 மி.லி பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை கற்பூரம் 10 கிராம் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 30 மி.லி தென்னை மரக்குடி எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாகும் வரை வசக்க வேண்டும். வசக்கிய பிறகு அதனுடன் 10 கிராம் கற்பூரமும் சேர்த்துக்கொள்ளவும். இவ்வாறு கிடைத்த தைலத்தை இளஞ்சுட்டில் மூட்டு தேய்மானம் ஆன இடத்தில் தடவி வர மூட்டு தேய்மானம் முற்றிலுமாக நீங்கும்.