மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது, இதனால் 30 முதல் 40 வயதை கடந்துவுடனே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்…
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது அதற்கு நாம் மருத்துவர்களை நாடி மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடியவை ஆனால் பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போது நாம் வீட்டில் சிலவற்றை செய்தால் எளிய பிரச்சினைகளில் இருந்து குணமாகி அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும், மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது, முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும் எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாழ்க்கையும் பராமரிக்க சில மருத்துவ குறிப்புகளையும் அழகு குறிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக நமது வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்து கொள்ள போது என்ன என்று பார்ப்போம்…
வாய்வு தொல்லை நீங்க : கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து அதில் சாம்பார் வைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலும் குணமாகும்..
தீப்புண் : வாழைத்தண்டு சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீ புண் சீ வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்..
மூக்கடைப்பு : சூடம் சுக்கு சாம்பிராணி பெருங்காயம் இந்த நான்கு பொருட்களையும் சம அளவு எடுத்து சோறு வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சூடாக்கி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலையும் தடவினால் குணமாகும் இவற்றை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு பலன் கிடைக்கும்…!!




