மாம்பழத்தை விரும்பாத மனிதர்கள் என்று யாரும் இல்லை, மனிதனாக இருக்கட்டும் மற்றவைகளாக இருக்கட்டும் மாம்பழத்தின் சுவையை எல்லோரும் விரும்புவது உண்டு..
அந்த மாம்பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் போட்டி போட நேர்ந்தது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது கற்றத்த கொழும்பான், கிளிச்சொண்டு, சேலம் செம்பட்டான், மல்கோவா, விளாட், என்று மாம்பழத்தில் பல தினுசுகள் உண்டு, முக்கனிகளில் முதலாவதாக கூறப்படும் இந்த ஞானப் பழ மரத்தின் தாவரவியல் பெயர் Mangifere Indica linn, இதன் குடும்பம் anacardiaceae, சிறு குழந்தைகளுக்கு மாம்பழம் அல்லது மாம்பழச் சாறு கொடுத்தால் மாந்தம் ஏற்படும் என்று கூறி வீட்டில் உள்ள பாட்டிமார்கள் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுப்பது தடை செய்ய முற்படுவார்கள், ஆனால் இதில் எவ்வித உண்மையும் இல்லை மாறாக மாம்பலத்தில் உயிர் சத்து செய்யும் உயிர்ச்சத்து ஏயும் 5000 lu மிக அதிக அளவில் உள்ளது, உச்சத்தை ஏவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றல் உள்ளது அதனால் உயிர்ச்சத்து ஏக்க immune friendly vitamin என்றொரு பெயரும் உள்ளது, இது உடலில் நோய் கிருமிகள் தாக்கம் ஏற்படாமல் பாதுகாப்புத்துடன் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை இது தடுக்க வல்லது, குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்தில் இருந்தே மாம்பழச்சாறு கொடுத்து வரலாம் நன்கு பழுத்த மாம்பலத்தில் இருந்து வெள்ளை துணியில் சாறு பிழிந்து வடிகட்டி தொடக்கத்தில் ஒன்று, இரண்டு துளிவீதம் நாக்கில் தடவி வரவேண்டும் பிறகு அரை தேக்கரண்டி ஒரு தேக்கரண்டி என்று படிப்படியாக அளவில் கூட்டிக் கொள்ளலாம், வளர்ந்த பிள்ளைகளுக்கு பெரியோர்களுக்கும் சிறு துண்டுகளாக மாம்பழச் சதையை வெட்டி கொடுக்கலாம் இது மலச்சிக்கலையும் நீக்க வல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு உயிர் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவே அவர்கள் உயிர் சத்து அதிகம் உள்ள மாம்பழம் பப்பாளி பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும், எனவே மாம்பலத்தில் முழு சக்தியும் இருக்கிறது என்பதனால் முருகரும் பிள்ளையாரும் போட்டி போட காரணமாயிற்று..!!




