சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நீல வழித்தடத்தில் ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. 2015-ல் தொடங்கப்பட்ட மெட்ரோ நிறுவனம், தற்போது நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் ரயில்களை இயக்குகிறது. மேலும், வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு சோதனை ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தப்பட்டு, பிப்ரவரிக்குள் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.




