மைத்துனனை குத்திக்கொன்ற மாமன்., மாமியாரையும் தாக்கி வெறிச்செயல்.!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியை சார்ந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா இவர்களுக்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பாண்டியன் மூத்த மகளுக்கு கடந்த சில ஆண்டுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வரும் ராம்ஜி என்னும் 30 வயதுடைய இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் இருவரும் பெண்ணின் பெற்றோர்கள் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ தினத்தன்று சுகுணாவிற்கும் அவரது கணவன் ராம்ஜிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது .இதனால் சுகுணா தேவியின் தாய் இடையிட்டு தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராம்ஜி சுகுணாவின் தாயாரை தாக்கியதாய் தெரிகிறது இது குறித்து தகவல் அறிந்து வந்த விஜயாவின் மகன் பரணி ராம்ஜியை தட்டி கேட்டுள்ளார். பின்பு ராம்ஜிக்கும் பரணிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாக்குவாதம் முற்றி ராம்ஜி பரணியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே பரணிஉயிர்  இழந்தார்.

பின்னர் தடுக்க வந்த சுகுணாவையும் ,விஜயாவையும் கத்தியை கொண்டு தாக்கினார். இதனால் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் வருவதற்கு முன்பே ராம்ஜி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராம்ஜியை தீவிரமாய் தேடி வருகின்றனர்.

Read Previous

கழுத்தை கரகரவென அறுத்த கணவன்… கண்ணை மறைத்த குடி வெறி… காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!!

Read Next

அனுமதியின்றி ஸ்பா நடத்திய விவகாரம்… விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீதுவழக்கு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular