யாரோ ஒருவர் கணவனாகவோ மனைவியாகவோ அமைவது ஏன் தெரியுமா பின்னால் இருக்கும் உண்மைகள்..!!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்த கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம் அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம் சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம் பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்…

சிலருக்கு நல்லது செய்கிறோம் பலரிடமிருந்து அளவுக்கு அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்கிறோம். இதை கொடுக்கல் வாங்கலே ரூண பந்தம் எனப்படுகிறது. சிலருடைய உறவுகள் ஆனந்தத்தை கொடுக்கிறது சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லை படுத்துகிறார்கள் சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன கனவில் கூட காண முடியாத பல ஆசிரியர்கள் நமக்கு சில சமயங்களில் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நாமே நம் தாய் தந்தையே சகோதர சகோதரிகளே நண்பர்கள் மனைவியை கணவனை பிள்ளைகளை தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம் ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும் நம்மால் உருவாக்க முடியாது முயற்சி மட்டுமே நம்முடைய முடிவு நம் கையில் இல்லை ஒரு சிலர் நம் வாழ்க்கையில் இருந்து திடீர் என்று காணாமல் போய்விடுவார்கள் இது இறப்பால் மட்டுமல்ல பல காரணங்களால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர். ஏதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் இருக்கிறது அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது அது என்ன சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் எச்சங்களை அவ்வாறு ஒரு இருப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா. இதற்கெல்லாம் தெரிந்த ஒரே ஒரு காரணம் நம்முடைய கர்ம வினை தான் இது நால்வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனை பிறப்பிலும் பல பல பாவ புண்ணியங்களை சேர்த்து இருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரை “சஞ்சித கர்மா” என்னப்படுகிறது அதன் ஒரு பகுதியை இந்த பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே ‘பிராரப்தக தர்மா’ எனப்படுகிறது . இந்த கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்த பிறவி முடிவடையாது நம் இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற முடியாது இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொரு இடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம். இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே இது தவிர ‘ஆகாம்ய கர்மா’என்று ஒன்று உள்ளது அது கொடுக்கப்பட்டுள்ள இந்த பிறவியில் நாம் செய்யும் நல்ல கெட்ட செயல்களால் ஏற்படுவது யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவும் முடியாது. அவரவர் செய்வினையின் பயனளையே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் துக்கமும் சந்தோஷமும் சண்டையும் சமாதானமும் ஏற்றமும் வீரமும் வெறுப்பும் ஆதரவும் அவரவர் கர்ம கதியே இதை தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லப்படுகிறது. பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது இரண்டையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் பணம் மட்டுமே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால் பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களை துக்கங்கள் விடுவதில்லை. எதற்கும் நிதானம் பொறுமை தேவை நமக்கு நடக்கும் நடக்கப் போகும் நல்லதையும் யாராலும் கொடுக்க முடியாது அதேபோல் தீமையும் கெடுக்க முடியாது..!!

Read Previous

உங்களை ஒருவர் அலட்சியப்படுத்தினால் அவரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

புகழ்ச்சிக்கு மயங்காமல் இருக்க என்ன செய்யலாம் அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular