
யார் இந்த வி கே தனபாலன் இளைஞர்களின் நாயகனாக மாறியது எப்படி என்று பார்ப்போம்..
திருச்செந்தூரில் பிறந்தவர் தான் விகே தனபாலன் வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் அவரது தந்தையின் இறப்பிற்கு பின் 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ரயிலில் பயண சீட்டு கூட எடுக்காமல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார், யாரும் இவருக்கு வேலை கொடுக்கவில்லை சென்னையில் வித்தியாசமான வாழ்க்கையை கண்ட அவர் பல்வேறு ட்ரேவல் நிறுவனங்களுக்கு ஹோட்டல்கள் என அனைத்திற்கும் சென்று வேலை கேட்டார் ஆனால் அவர்கள் யாரும் இவருக்கு வேலை கொடுக்கவில்லை, சென்னையில் யாரையும் தெரியாததால் பிளாட்பாரத்தில் தான் அவர் தங்கி இருந்தார் சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நாடி இருப்பார் ஆனால் அவர்கள் யாரும் இவருக்கு கருணை காட்ட வில்லை, உடல்நிலை மிகவும் மோசமானது இவ்வாறு இருக்க பசியால் வாடிய தனபால் ஒருநாள் இரவு பிளாட்பாரத்தில் பிச்சைக்காரர்களுடன் தங்கினார், நாட்கள் செல்ல அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது ஒரு நாள் அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது இரண்டு போலீஸ்காரர்கள் அவரை லத்தியால் கடுமையாக தாக்கினார் பின்னர் அவரை சந்தேக விசாரணையில் பிடித்து செல்ல போகின்ற போது தான் ஜெயிலுக்கு போவதை அறிந்தவர் உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார், இரண்டு ரூபாய் தருகிறேன் இதனை தொடர்ந்து நீண்ட தூரம் ஓடி அவர் ஒரு இடத்தில் நின்றார் அங்கு பலரும் வரிசையாக படுத்திருந்தனர் அவர்கள் அருகில் சென்று அமர்ந்து பின்னர் அங்கேயே படுத்துக்கொண்டார், காலை 5 மணி அளவில் அவர் கண்விழித்த போது அவருக்கு முன்னால் ஐந்து பேரும் பின்னால் சுமார் 200 பேரும் இருந்தனர் அப்போது தனபாலனை அணுகிய ஒருவர் தம்பி உனக்கு நான் பணம் தருகிறேன் இந்த இடத்தை நீ எனக்கு விட்டு தரியா என்று கேட்டார் எவ்வளவு தருவீர்கள் என தனபாலன் கேட்டு இரண்டு ரூபாய் தருகிறேன் என்று அவர் கூற அமெரிக்க துணை தூதராக புலம்பி போன தனபாலன் அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தார், அது அமெரிக்க துணை தூதரகம் என்று தெரிந்தது விசாவுக்கு அங்கு வரிசையாக நிற்பவர்கள் என்பது தெரிந்தது உடனடியாக அதைப் பெற்றுக் கொண்டு தனபால் அன்று வயிறு நிறைய சாப்பிட்டார், இதனை தொடர்ந்து இதனையே தொழிலாக செய்ய முடிவு எடுத்தார் மாலை மற்றும் காலை நேரத்தில் இடம் பிடித்துக் கொடுத்தால் தனபால் அவருக்கு கமிஷன் கிடைத்தது சிறிது நாட்களில் இரண்டு ரூபாய் 4ரூபாய், எட்டு ரூபாய் என வாங்கிக் கொண்ட பின்னர் டிராவல் ஏஜென்சியில் புரோக்கராக வேலை செய்து வந்துள்ளார், இதனால் இவரின் வேலை திறமைகளை கண்டு ஒருவர் இவரை ஐந்து ரூபாய் சம்பளம் தருகிறேன் பகல் நேரத்தில் கடையை பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டார் அவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு கடையில் வேலை செய்தார், அப்படியே அவரது வாழ்க்கை பயணம் தொடர்ந்தது, 1986 ஆம் ஆண்டு 17ம் தேதி சென்னை மன்னடியில் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார், 1500 வாடகையுடன் மதுரா டிராவல்ஸ் என்ற தனது நிறுவனத்தை ஆழமாக நிலைநிறுத்தினார் அதன் மூலமாக அவர் வளர்ச்சி பெற்றார் தனது வாழ்க்கை தெரு ஓரங்களில் ஆரம்பித்து இன்று பல கோடிகளில் அவரது வாழ்வு அளித்துள்ளது மேலும் இளைஞர்களுக்கு இவரே நாயகனாக உள்ளார் என்றும் கூறுகின்றனர் இளைஞர்கள்..!!