சென்னையிலிருந்து கோவைக்கு இன்டர்சிட்டி ரயிலில் வந்த சட்டக் கல்லூரி மாணவிக்கு, சக பயணியாக இருந்த காவலர் சேக் முகமத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். காட்பாடி அருகே ரயில் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. மாணவி செல்போனில் வீடியோ பதிவு செய்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கி விசாரிக்கப்பட்ட காவலர், பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




