
ரயில்வே காவலர் ஒருவர் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனிடம் கடுமையாக நடந்து உள்ள வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெறும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் டெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே கான்ஸ்டபிள் ஒருவர் அந்த சிறுவனிடம் மிகவும் கடுமையாய் நடந்து உள்ளார்.
சிறுவனை காலால் எட்டி உதைத்து எழுப்பும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ரயில்வே நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் இந்த வீடியோவை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பரப்பி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த காவலருக்கு எதிரான கண்டனங்கள் நாடெங்கிலும் எழுந்து வருகின்றது. அந்த காவலர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து உள்ளதாகவும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CuyZLkHB6pL/?utm_source=ig_web_button_share_sheet