
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டதாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கேரள வயநாடு தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தி, தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் நாளை (ஜூலை 07) தீர்ப்பு வழங்க உள்ளது.