வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு..!!

வங்க கடலில் வரும் நவம்பர் 23ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும் பருவமழை தீவிரம் அடையவில்லை இந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பருவமழை தீவிரம் அடையும் என சொல்லப்பட்டது, ஆனால் அந்த காட்டுறது தழுவு பகுதி உருவாகுவதிலேயே தாமதம் ஆனது மூன்று முறை தள்ளி போய் கடந்த 11ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது இந்த தாழ்வு பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது, இந்த நிலையில் வங்க கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இது மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..!!

Read Previous

தெலுங்கிற்கு பாகுபலி போல தமிழ் சினிமாவுக்கு கங்குவா இயக்குனர் சுசீந்திரன்..!!

Read Next

பெரும் சோகம் அதிகமான உடற்பயிற்சியால் ஜிம் உரிமையாளர் மயங்கி உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular