வடகொரியாவிற்குள் நுழைந்த அமெரிக்க வீரரின் ‌நிலை என்ன?.. மீட்கும் ஆலோசனையில் அமெரிக்கா..!!

வடகொரியாவிற்குள் நுழைந்த அமெரிக்க வீரரின் ‌நிலை என்ன?.. மீட்கும் ஆலோசனையில் அமெரிக்கா..!!

 கொரிய தீபகற்பத்தில் அமைந்திருக்கும் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே சுமுகமான நிலை இல்லை. இரண்டு நாடுகளும் எப்போதும் ஒன்றோடு ஒன்று  மோதலில் தான் இருக்கிறது. இதில் தென் கொரியாவுக்கு அமெரிக்கா அரசு ஆதரவாக செயல்படுகின்றன. இதனால் இரு நாடுகளும் இணைந்து அவ்வபோது கூட்டு ராணுவ பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றன.

இற்காக அமெரிக்க வீரர்கள் தென் கொரியாவிற்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இரண்டு நாடுகளை பிரிக்கும் எல்லைக் கோட்டில் அமைந்துள்ள பன்முக கிராமம் வழியாக வட கொரியாவிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் அவரை வட கொரியா ராணுவம் கைது செய்து விட்டது.

அமெரிக்கா தனது குடிமக்கள் வடகொரியாவுக்கு போக வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. வடகொரியா பிடித்து வைத்துள்ள அந்த ராணுவ வீரரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்க ராணுவம் அந்த வீரரை மீட்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

Read Previous

சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

Read Next

தெரு நாய்களுக்கு ஆதார் அட்டை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular