தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தலைநகர் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் மழை பணிகளை ஒருங்கிணைக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.




