வாகன ஓட்டிகளே உஷார்..!! இ-பாஸ் கட்டாயம் .!! மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..!!
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் உதகையில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை தடுக்கவும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் சுற்றுலா வாகனங்களுக்கு மே 7 முதல் செப் 30 ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ,தற்போது மாவட்ட நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதாவது, செப்.30ம் தேதியோடு இ-பாஸ் நடைமுறை முடிவடைந்ததால், உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் மற்றும் உதகை செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையே நீடிக்கும் என்று திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.




