இப்போது இருக்கும் காலகட்டத்தில் நிறைய பேர் வாயு தொல்லையால் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த தொல்லை வருவதற்கு காரணம் நமது வாழ்க்கை முறையும் உணவு முறையும் தான். இந்த பிரச்சனையை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து இயற்கை வழியில் எப்படி விரட்டி அடிப்பது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஆறு மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு வருத்து எடுத்த பொருட்களை ஆற வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த பொருட்களை இடித்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க விடுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு டம்ளர் அளவுக்கு வடிகட்டி வெள்ளம் சேர்த்து குடித்தாலே போதும். வாயு தொல்லை சீக்கிரம் நீங்கிவிடும்.




