வாய்வு தொந்தரவு பிரச்சனை நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்காக எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் எந்த மாத்திரையும் சாப்பிடாமல் இயற்கையான முறையில் இந்த வாயு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இந்த மாதிரி சின்ன சின்ன வயிறு சம்பந்தமான வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் வீட்டிலேயே கஷாயம் அல்லது மருந்து செய்து சாப்பிடுவார்கள். அதேபோன்றுதான் இந்த வாயு பிரச்சனைக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் தீர்வு காண முடியும்.
அதற்குமுதலில் நான்கு கிராம்பு இடிச்சு எடுத்துக்கோங்க. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் இடிச்ச கிராம்பு சேர்த்து இதனுடன் அரை எலுமிச்சம் பழம் சாறு, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கோங்க அவ்வளவுதான். இதை அப்படியே உடனே குடித்து விடுங்கள். வாயு படிபடியாக விட்டு விடும். மேலும் இதனால் வயிறு உப்புசம், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.




