
Oplus_131072
வாழ்க்கையில் முக்கியமான மூன்று விஷயங்கள்..!! கண்டிப்பாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்..!!
வாழ்க்கையைப் பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்கு செல்ல வேண்டும் அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
1. மருத்துவமனை
2. சிறைச்சாலை
3. சுடுகாடு
இந்த மூன்று இடங்களுக்கு சென்றால் நாம் வாழ்க்கையைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்வோம். ஏனென்றால் மருத்துவமனை செல்லும் போதும் சிறைச்சாலை செல்லும் போதும் சுடுகாடு செல்லும் போதும் மனதில் ஏராளமான எண்ணங்கள் தோன்றும்.
மருத்துவமனை
ஆரோக்கியத்தை விட பெரிய சொத்து வேற எதுவும் இல்லை. என்பது மருத்துவமனை செல்லும் பொழுது தான் நமக்கு புரியும்.
சிறைச்சாலை
சுதந்திரத்தை விட விலைமதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பது அப்பொழுதுதான் நமக்கு தெரியும்.
சுடுகாடு
உயிரோடு வாழ்வதை விட வேறு எதுவும் பெரிதில்லை என்பதை சுடுகாடு புரிய வைக்கும்.