“விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்” வழங்கும் திட்டத்தை தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்த அரை மணி நேரத்திற்குள் வங்கி மேலாளர்கள் சரிபார்ப்பை முடித்து, சில மணி நேரங்களிலேயே கடன் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும். 2026-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் இச்சேவை கிடைப்பதை உறுதி செய்ய கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




