சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் ஆகஸ்ட் 22 அன்று கைது செய்தனர்.
விசாரணையில், ஒரு கும்பல் சிறுமியை இந்த தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




