வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா..!! படித்ததில் பிடித்தது..!!

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள். ” ஒரு கட்டு கீரை என்ன விலை….?”

” ஓரணாம்மா”

“ஓரணாவா….? அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ”..

“இல்லம்மா வராதும்மா”.

” அதெல்லாம் முடியாது. அரையணாதான்”. பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு “மேல காலணா போட்டு கொடுங்கம்மா”
என்கிறாள்.

“முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான் தருவேன்”… என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு “சரிம்மா உன் விருப்பம்” என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள். “என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலயா…?” என்று
அந்த தாய் கேட்க…

“இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்”..

“சரி. இரு இதோ வர்றேன்.” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். “இந்தா சாப்ட்டு போ” என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன் ” ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
மூன்றணா வருதும்மா…..? என்று கேட்க..

அதற்கு அந்த தாய், “வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா” என்று
கூறினாள்…

Read Previous

இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்கினால் என்ன பிரச்சனை வரும்..??

Read Next

கர்ப்பப்பை காக்கும்.. ஆயுள் கூட்டும்.. குழந்தையின்மை போக்கும்.. வாழைப்பூ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular