
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த ஒரு வாக்கியத்தை நம் அனைவரின் வாழ்க்கையிலும் கேள்விப்பட்டிருப்போம். அது என்னவென்றால் எவ்வளவு பெரிய உறவினராக இருந்தாலும் விருந்தும் மருந்தும் மூன்றே நாள் தான் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதற்கு நாம் அனைவரும் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு ஆனால் இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்பதின் உண்மை பொருள் தெரியுமா ..கிழமைகளில் ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய மூன்றும் சூரிய நாட்கள் . திங்கள் புதன் வெள்ளி சந்திர நாட்கள் சனிக்கிழமை இரண்டிற்கும் பொதுவான நாள் சூரிய நாளில் மருந்தும் சந்திர நாளில் விருந்தும் பொதுவான நாட்களில் நீராடலையும் தமிழர் வைத்துக் கொண்டனர். விருந்துகள் சந்திர நாட்களிலும், மருந்துகள் சூரிய நாட்களிலும் அருந்த வேண்டும். என்பதை குறிக்கவே விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்றனர்.