விழுப்புரம் மாவட்டத்தில் TNPSC தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்..!! மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

  • போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
  • ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. 

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப் படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்களும் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் நபர்கள் ஜூலை   14ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read Previous

ரேஷன் கார்டு இல்லையெனில் ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது – குழப்பத்தில் குடும்பத் தலைவிகள்..!!

Read Next

அரசியலில் நடிகர் விஜய் களமிறங்குவது உறுதி? – விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் பின்னணி என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular