இன்றைய காலகட்டத்தில் விஷக்கடிகளுக்கு தீர்வு என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றது, ஆனால் அன்றைய காலகட்டத்தில் வீட்டை சுற்றி கிடைக்க கூடிய மூலிகைகளை வைத்து விஷக்கடிகளுக்கு மருந்து தயாரிக்கப்பட்டது,அந்த மருந்தின் மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே விஷ வண்டுகள் பூச்சிகள் தாக்கப்பட்டவர்கள் குணமடைந்து விடுவார்கள்..
விஷக்கடி விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசிதர்களை கசக்கி தேய்த்தால் விஷம் முறிந்துவிடும் வலியும் குறைந்து விடும் சிறிது நேரத்திலேயே விஷ வண்டுகள் கடித்ததற்கான அறிகுறியே இல்லாமல் உடல் ஆரோக்கியம் அடைந்து விடும், பூச்சிக்கடி உடல் அரிப்பு, பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட வேண்டும் அரிப்பு நிற்க வேண்டும் என்றால் தேனி குழவி கடித்து வீங்கிய காயங்களும் உடனடி சரியாகும் கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும், மேலும் வீட்டை சுற்றியுள்ள தூதுவளை வல்லாரை குப்பைமேனி மற்றும் ஊமத்தங்கா தலை இவற்றை வைத்து வீட்டு வைத்தியம் செய்து விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்..!!




