• September 29, 2023

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு…!!

செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 56). இவர் கடந்த 22-ந் தேதி காலை 11 மணியளவில் மனைவியுடன் சொந்த விஷயமாக வீட்டை பூட்டிக்கொண்டு காரைக்குடி சென்றார்.

நேற்று முன் தினம் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ¾ கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Previous

பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு..!!

Read Next

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற தொழிலாளி கைது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular