வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட பாரம்பரிய பரிகாரங்கள்..!!

Oplus_131072

 

மருதாணி(மெகந்தி):

பெண்கள் என்றாலே அழகுதான். அதை விட அவர்களின் குணநலன்கள் மிகவும் அழகு. அவர்களின் பொறுமை தான் மிகப்பெரிய அழகு. பெண்களின் விரல்கள் வெண்டைக்காய் மாதிரி இருக்கும் என்பார்கள். அதனால்தான் வெண்டைக்காயை லேடிஸ் பிங்கர் என்பார்கள். அந்த விரல்களின் நகங்களில் நெயில் பாலிஷ் வண்ண வண்ண நிறங்களில் பளிச்சிடுவார்கள். பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அவை ரசாயனக் கலவை ஆகும்.

நம் முன்னோர்கள் பெண்களின் கைகள் மற்றும் விரல்களுக்கு அழகு சேர்க்க மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசி இரவில் படுத்து காலையில் எழுந்து கைகளை கழுவினால் கைகள் செக்க சிவந்து வண்ணமயமாய் காட்சியளிக்கும்.

இப்போது பெண்களின் கைகளில் விதவிதமான மெஹந்தி வரைய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசல்களில் இருக்கிறார்கள். அந்த மெஹந்திக்குள் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது. பெண்கள் பயப்படாமல் இருப்பதற்கும், எதிர்மறை ஆற்றல்கள்(Negativity) அணுகாமல் இருப்பதற்கும் அந்த கால மக்கள் மெஹந்தி எனப்படும் மருதாணி இலைகளை அரைத்து கைவிரல்களில் இட்டுக் கொண்டனர்.

பெண்களின் உடலுக்குள் விரல்நுனிகள் வழியாகத்தான் எதிர்மறை ஆற்றல்கள் புகுந்து விடுகின்றன. அவற்றை தடுக்க மருதாணி கை விரல்களில் போடுவது பழக்கமாக்கி கொண்டனர். இப்போது அது பேஷனாகி விட்டது.

இரத்த சுத்தி:

நமது உடலின் நாடி நரம்புகளில் ஓடும் இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும். இரத்தம் கெட்டு விட்டதற்கு அடையாளமாய் கை கால் விரல்களில் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடலில் இரத்தம் கெட்டுவிட்டால் மாற்று இரத்தம் உடலில் செலுத்த வசதியுள்ளவர்கள் ஒரு சிலர், பெரிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற பணத்தை செலவு செய்வார்கள். ஆனால், எளிய முறையில் சிக்கன செலவில் இரத்தத்தை சுத்திகரிக்க தினமும் சிறிய வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) சிறிதளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகவும், சீராகவும் ஓட்டம் பெறும். என்ன நாற்பத்தெட்டு நாள் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு விட்டு யார் பக்கமும் போகாமல் கொஞ்சம் நேரம் தள்ளி நிற்க வேண்டும் அவ்வளவு தான்.

நமக்குள் இருக்கும் ‘நான்’:

பிரம்மா, மூம்மூர்த்திகளில் படைப்பு கடவுளான பிரம்மாவிற்கு நான்கு தலைகள் உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. அது ஒரு உருவகமே தவிர உண்மையில்லை. எந்த ஒரு மனிதரென்றாலும் அவனுக்குள் நல்ல குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும். இது உலக நியதி. பள்ளி இறுதி வகுப்பில் பாஸ் செய்து விட்டாலே நாம் வசிக்கும் தெருவே நம்மைக் கவனிக்கிறதா? என்று பார்த்து நம் தலையைக் கர்வமாக வைத்துக் கொள்வோம். அதுதான் தலைக்கனம் என்பது.

நமக்குள் இருக்கும் ”நான்” என்ற ஆணவம் பெருகும்போது ஏதாவது ஒரு இன்னல் வந்து நம்மை அழ வைக்கும். அதே போல காமியம். மாயை, திரோதை மாமாயை ஆகிய குணங்கள்தான் அந்த நான்கு தலைகள். அந்த நான்கு தலைகளின் ஒன்றான ஆணவத்தைக் கொய்வதைத்தான் சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்தார் என்று புராணம் கூறுகிறது.

மும்மூர்த்திகள் எனப்படும், சிவன், விஷ்ணு, பிரம்மா எல்லோரும் நமது உடம்புக்குள்ளேயே இருக்கிறார்கள். நம் உடம்பில் நீர்த்தத்துவமாக இருப்பவர் விஷ்ணு. ஆதலால் தான் அவர் கடலில் பள்ளிக் கொண்டிருப்பது போல சித்தரித்து இருப்பார்கள். அதே போல விஷ்ணு குளுமையாக இருப்பவர் சாந்த சொருபர்.

அண்ட சராசம் எங்கும் அணுத்துகள் இயங்கி கொண்டே இருப்பதைத்தான் நம் முன்னோர்கள் பிரம்மா என்று அழைக்கிறார்கள். அணுத்தத்துவமாக இருப்பவர் பிரம்மா. அந்த அணுவும் நம் உடலுக்குள் இயங்கி கொண்டே இருக்கிறது

வெப்பமாக இருப்பவர் சிவன். தீ தத்துவம். இவர் இருப்பது பனிகள் சூழ்ந்த மலையென்றாலும், குளிராக இருந்தாலும் ஐஸ்கட்டிகளும் உள்ளுக்குள் ஒரு வெப்பத்தை மறைத்தே வைத்திருக்கிறது.

தியானம் கைகூட:

அதிகாலை மணி நான்கு முதல் ஆறு வரை பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அந்த நேரத்தில் எழுந்திருக்கிறீர்கள். சற்று தியானம் செய்தால் மனம் அமைதியாய் இருக்கும் என்று எண்ணி தியானத்தில் அமர்கிறீர்கள். அந்த நேரத்திலும் உங்கள் மனம் ஒருநிலைப் படவில்லையா? கவலை வேண்டாம். சிவப்பு கனகாம்பரம் பூக்கள் சிறிதளவு எடுத்து இருகரங்களிலும் வைத்து கண்மூடி தியானம் செய்து பாருங்கள். மனம் தன்னால் ஒருநிலைப்பட்டு விடும்.

வீட்டில் எதிர்மறை ஆற்றலா? எப்படி விரட்டுவது?

நம் வீடு காற்று வரும்படியாக காற்றோட்டமாகவும், சூரியனின் கதிர்கள் விழும்படியாக இருந்தால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் மிகுந்து இருக்கும். சில வீடுகளில் கதவு, ஜன்னல்களை மூடியே வைத்திருப்பார்கள்.

அப்படிப் பட்ட வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் மேலோங்கி இருக்கும். ஆதலால் தான் அந்த வீட்டில் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், நிம்மதியின்மை அதிகமாய் இருக்கும்.

அந்த எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டுவது? அதற்குதான் வீட்டில் சாம்பிராணி தூவி புகைக்காட்டுவார்கள். மஞ்சள் தண்ணீர் அல்லது கடல் நீர் தெளிப்பார்கள். கடல் நீர் கிடைக்காதவர்கள் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு கரைத்து வீடுகளில் தெளிப்பார்கள்.

சின்னஞ்சிறிய பூக்கள்:

அந்த பூக்கள் மிகவும் வாசனையாக இருக்கும். சிலர் தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு வைத்துக் கொள்வார்கள். மணமாகவும் இருக்கும், உடல் சூட்டைத் தணிக்கவும் செய்யும். அந்த பூக்கள் சின்னஞ்சிறியதாய் இருக்கும்.

அந்த பூக்களை மாலையாக கோர்த்து வீட்டு நுழைவாயிற் கதவில் போட்டு விட்டால், எதிர்மறை ஆற்றல்களை அந்த பூக்கள் கிரகித்து கொள்ளும். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ இதை செய்யலாம். அதன் பேர்தான் ”மகிழம்பூ” வீட்டு வாயிலில் மகிழம்பூ மாலைச் சூட்டி மகிழ்வோடு உங்கள் இல்லத்தில் இருக்கலாமே!

 

Read Previous

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு இயற்கை நிவாரணம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular