
இந்து சாஸ்திரத்தில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். எந்த பூஜை செய்தாலும் எந்த சடங்குகள் செய்தாலும் விளக்கேற்றிய பின்னரே தொடங்குவார். அதுபோல இறைவனுக்கு ஆரத்தி எடுப்பதும் வழக்கம். விளக்கேற்றும் போது அந்த இடத்தில் இருக்கும் இருள் விலகி இறைவன் அங்கே வந்து அமருவார் என்பது ஐதீகம்.
நாம் விளக்கேற்றும் போது தேவர்களும் கடவுளும் மனம் குளிர்ந்து ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது. வீட்டில் விளக்கேற்றும் போது எதிர்மறை சக்திகள் வெளியேறி நேர்மறை சக்திகள் பெருகும். அப்படி விளக்கேற்றுவதற்கும் சில முறைகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் இருக்கின்றன. அவை என்ன என்பதை இனி காண்போம்.
விளக்குகளில் மண் விளக்கு, பித்தளை விளக்கு, ஐம்பொன் விளக்கு, பஞ்சலோக விளக்கு, வெள்ளி விளக்கு, தங்க விளக்கு என பல வகைகள் உண்டு. அதில் நம் வசதிக்கேற்ப எந்த விளக்கு வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு. அதிகாலையிலேயே விளக்கேற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 6:00 மணிக்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும். காலை மாலை இரண்டு வேலைகளிலும் விளக்கேற்ற வேண்டும். மாலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் விளக்கேற்றி விட வேண்டும்.
பொதுவாக வீட்டில் ஒரு விளக்கு ஏற்றக்கூடாது. இரண்டாக விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இரண்டிற்கு மேற்பட்ட தீபங்கள் ஏற்றினால் அது விசேஷ பலன்களை தரும். ஐந்து முகம் கொண்ட விளக்கில் ஐந்து தீபங்கள் ஏற்றினால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். அதேபோல் விளக்கை கிழக்கு திசை நோக்கி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அப்படி செய்தால் செல்வம் ஞானம் அறிவு ஆகியவற்றை வளர்க்கும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.
விளக்கு ஏற்ற பல திரிகளை பயன்படுத்தலாம். ஒவ்வொரு திரி பயன்படுத்தும் போது ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும். பஞ்சத்திரி போட்டு விளக்கேற்றினால் சகல நன்மைகளும் கிடைக்கும். அம்பாளின் ஆசி கிடைக்க சிகப்பு துணி திரி, மஞ்சள் துணி திரி ஆகியவற்றை பயன்படுத்தலாம். செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் அருள் கிடைக்க, குழந்தை பாக்கியம் உண்டாக வாழைத்தண்டு திரி கொண்டு விளக்கேற்றலாம். தீய சக்திகள் நெருங்காமல் இருக்க, முன் ஜென்ம பாவங்கள் மற்றும் வினைகளையும் நீக்க, செல்வ வளம் பெருக தாமரைத் தண்டு திரியை கொண்டு விளக்கேற்றலாம்.
விளக்கேற்ற பயன்படுத்தப்படும் உகந்த எண்ணெய் ஆக கருதப்படுவது பஞ்சபூட்டு எண்ணெய் ஆகும். மேலும் நெய், நல்லெண்ணெய் போன்றவற்றை கொன்றோம் விளக்கு ஏற்றலாம். கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
ஒரு விளக்கு ஏற்ற பயன்படுத்திய எண்ணையை மற்றொரு விளக்குக்கு ஊற்றக்கூடாது. விளக்கை சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் அதே எண்ணையை பயன்படுத்தக் கூடாது விளக்கை சுத்தம் செய்யும்போது பழைய எண்ணெயை கீழே ஊற்றிவிட்டு புதிதாக தான் எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். செவ்வாய்,வெள்ளி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் விளக்கை ஏற்றிவிட்டு குளிர வைக்கும் போது கையை பயன்படுத்தி குளிர வைக்க கூடாது. பூவை பயன்படுத்தி குளிர வைக்கலாம் அல்லது திரியை பின்னோக்கி இழுத்து குளிர வைக்கலாம்.
வீட்டில் விளக்கு ஏற்றும் போது முதலில் நிலை வாசலில் விளக்கேற்றி வைத்த பின்பு தான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆவது தீபத்தை எறிய விட வேண்டும். இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என்ற நினைப்பவர்கள் தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்.