வாஸ்து சாஸ்திரத்தின் படி செடிகள் மற்றும் மரங்களை சரியான இடத்தில் நடுவது அவசியம் சரியான திசை மற்றும் இடத்தில் செடிகளின் அட்டால் வீட்டிற்கு நன்மை உண்டாகும் எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி பப்பாளி மரத்தை வீட்டின் முன்பு நட்டு வளர்க்கலாமா வேண்டாமா என்று இப்போது தெரிந்து கொள்..
வாஸ்து சாஸ்திரத்தில் நம் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன குறிப்பாக நம் வீட்டில் எந்த ஒரு பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதை விளக்கப்பட்டுள்ளது..
வீட்டில் செடிகள் மற்றும் மரங்கள் நடுவதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் தனி முக்கியத்துவம் உண்டு வீட்டில் சில வகையான செடிகளை நட்டால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும் அதே போல் வீட்டில் உள்ள அனைவரின் உடல் நலமும் நன்றாக இருக்கும். மேலும் வீட்டில் பணத்திற்கும் செல்வத்திற்கும் எந்த குறையும் இருக்காது என்று கூறுகின்றனர். செடிகள் மற்றும் மரங்களை நாம் தெய்வங்களாக கருதுகிறோம் அதனால் தான் பலர் சில வகையான செடிகள் மற்றும் மரங்களை தினமும் வழிபடுகிறார்கள். அதேபோல் சரியான திசை மற்றும் இடத்தில் அவற்றை நடிக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி செடிகள் மற்றும் மரங்களை சரியான இடத்தில் நட்டால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.வாஸ்து சாஸ்திரத்தின் படி பப்பாளி மரம் வீட்டின் முன்பு இருப்பது நல்லதல்ல அதனால்தான் இந்த மரத்தை வீட்டின் முன்பு நட்டு வளர்க்கக்கூடாது என்று கூறுகிறார்கள். ஒருவேளை விதை விழுந்து மரம் வீட்டில் முன்பு வளர்ந்தால் அந்த செடியை பிடுங்கி வேறு இடத்தில் நடுங்கள் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது வீட்டில் முன்பு பப்பாளி மரத்தை நட்டால் நிதி சிக்கல்கள் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் குறையும் என்றும் கூறுகிறது அதனால் வீட்டில் முன்பு பப்பாளி மரத்தை நடும் முயற்சியை செய்யாதீர்கள்…!!