வெட்கமே இல்லை..!! காங்கிரஸ் கட்சியை ஒரே வார்த்தையில் சம்பவம் செய்த பிரதமர் மோடி..!!

பாராளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்பொழுது மணிப்பூருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி  எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் வந்து குறுகிட்டு அமளியில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிபூருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி அவையின் மையப் பகுதிக்கு வந்து குறுகிட்டு அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சியினர் மக்களவையின் மையப்பகுதி வந்து கோஷங்களை எழுப்பி பிரதமர் மோடியை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டது மிகவும் கண்டாணத்துக்குரியது என்று சபாநாயகர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில் “நாங்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆட்சி அமைத்து வருகின்றோம்.ஓட்டு வங்கிக்கு  இல்லாமல் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் நாங்கள் ஆட்சி செய்து வருகின்றோம். ஊழல் நடைபெறாத வகையில் நாங்கள் ஆட்சி செய்து உள்ளோம். வருங்கால தலைமுறையினருக்கான வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் ஆட்சி புரிந்து வருகின்றோம். எங்கள் ஆட்சியில்  25 கோடி மக்களை ஏழை நிலையில் இருந்து மீட்டுள்ளோம்.

வாக்கு வங்கி அரசியலை புறக்கணித்துவிட்டு மதசார்பின்மையை மக்கள் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்ததால் சிலருக்கு ஏற்பட்ட வலிகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. காங்கிரஸ் கட்சி காலங்களில் பொது ஊழல் செய்வதில் மிகப்பெரிய போட்டியில் நிலவியது. காங்கிரஸ் கட்சியினர் தங்களின் ஊழலை வெட்கமே இல்லாமல் ஒப்பு கொண்டுள்ளனர்”, என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

பூ மாதிரி இட்லி வேணுமா?.. இத ஃபாலோ பண்ணுங்க..!!

Read Next

90 கிட்ஸ் ஃபேவரட் தேன் மிட்டாய் செய்வது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular