தற்சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சிலவற்றை மேற்கொள்ளலாம், அவற்றில் சில இங்க காண்போம்..
வெயிலில் வெளியே செல்லும்போது முழு கை ஆடை தலையில் தொப்பி குடை கூலிங் கிளாஸ் ஆகிவை பயன்படுத்திக் கொள்ளவும் அதேபோல் வெயிலில் செல்லும்போது வழியில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம், மேலும் நண்பர்கள் பன்னிரண்டு மணி முதல் மூன்று மணி வரை அத்யாவசிய தேவையின்றி வெயில் செல்வதை தவிர்க்கவும், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும், பருத்தி ஆடைகள் அணிவதன் மூலம் உடல் சூடு அடையாமல் இருக்கும் மேலும் குழந்தைகளை காலை 11 மணிக்கு மேல் வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம் மேலும் இளநீர் மோர் எலுமிச்சை நீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதன் மூலம் உடலை வெயிலில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்..!!




