வெற்றிலைப்பெட்டி மாத்திரை பெட்டியாக மாறிபோனது ஏன்..??

Oplus_131072

வெற்றிலைப்பெட்டி மாத்திரை பெட்டியாக மாறிபோனது ஏன்?

பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை கோல்கேட் பற்பசை கம்பெனி கடுமையாக விளம்பரம் செய்தது..

பற்கள் வெள்ளையாக இருந்தால் தான் சமுதாயம் மதிக்கும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள்
அதன் பாதிப்பு வெற்றிலைக்கு விடை கொடுத்தது.

நமது மூதாதையர்களின் பற்கள் யாருக்கும் வெண்மையான பற்கள் இல்லை அனைவரும் வெற்றிலை போட கூடியவர்களாக இருந்தார்கள் இன்று நம்மை போன்று பெட்டி பெட்டியாக மாத்திரையை பயன்படுத்தியவர்கள் அல்ல அவர்கள். ஏனென்றால் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தில் தீர்வு இருந்தது நல்ல ஜீரண தன்மையை வெற்றிலை ஏற்படுத்தியது முதுமையில் ஏற்படக்கூடிய சுண்ணாம்புச்சத்து இழப்பை வெற்றிலை பாக்கில் உள்ள சுண்ணாம்பு ஈடு செய்தது. எந்த சிக்கலான உணவை சாப்பிட்டாலும் அதை ஜீரணமாகும் தன்மை வெற்றிலை என்னும் காரத்தன்மையுள்ள பொருளிலும் பாக்கு என்னும் துவர்ப்பு தன்மை உள்ள பொருளிலும் சுண்ணாம்பு என்னும் எரிப்பு தன்மை உள்ள பொருளிலும் கலந்து இருந்தது .

என்றைக்கு தமிழர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை ஆங்கில மருத்துவர்களின் பேச்சைக்கேட்டு கை விட்டார்களோ அன்றே இவர்களுக்கு பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தது சர்க்கரை நோய் மிக அதிகமாக பரவியதற்க்கு வெற்றிலை போடும் பழக்கத்தை கை விட்டதும் ஒரு காரணமாகும். இந்த வெற்றிலை போடும் நல்ல பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் ஆங்கில மருத்துவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் காரணம் இந்த பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வருமானமே கிடைக்காது என்பதுதான் உண்மை.

தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?

நாம் வெற்றிலை போடலாம் என நினைத்தாலும் கூட நகர்ப்புறங்களில் கிடைப்பதில்லை அந்த அளவிற்கு வெற்றிலையை ஒழித்துக் கட்டி விட்டனர் இப்போது மெடிக்கல் ஷாப்பில் மருந்துகள் மாத்திரை வடிவில் அமோக வியாபாரம்..

Read Previous

இலட்சக்கணக்கான மக்களை கொன்ற இந்தியாவின் மோசமான கொடுங்கோல் அரசர்கள் யார் தெரியுமா..??

Read Next

சென்னை நேப்பியர் பாலத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular